Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

புதுச்சேரியில் 545 பேருக்கு கரோனா :

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல் விவரம்:

புதுச்சேரி மாநிலத்தில் 9,092 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 400, காரைக்கால் – 112, ஏனாம் – 24, மாஹே – 9 என மொத்தம் 545 (5.99 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பிள்ளையார்குப்பம் மண்ணாடிப்பட்டு ரோட்டைச் சேர்ந்த 85 வயது முதியவர், கல்மண்டபத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த 60 வயது முதியவர், வெங்கட்டா நகரைச் சேர்ந்த 81 வயது முதியவர், வினோபா நகரைச் சேர்ந்த 73 வயது முதியவர், முத்திரையர்பாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண் என புதுச்சேரியில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 106 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,115 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,032 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 7,147 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 938 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 1,315 (92.02 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரத்து 783 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 670 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 685 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x