Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
கல்வி கற்க வெளிநாடு செல்லும் புதுச்சேரி மாணவர்களுக்கு கரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, கரோனா பரவலைத் தடுக்க புதுச்சேரி அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் கல்வி கற்கும் புதுவை மாணவர்கள் தங்களுக்கு 2வது தவணை தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதிக்க வேண்டும் என ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை ஏற்றுஅந்த மாணவர்களுக்கு 2வதுதவணை தடுப்பூசி செலுத்துவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய ஆளுநர் தமிழிசை சுகா தாரதுறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை உடனடியாக செய்துள்ளது. இதற்காக, வெளிநாடுகளில் கல்வி பயிலும் புதுவை மாண வர்கள் ஆளுநருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
முழுமையாக தடுப்பூசி
போட்ட 10 கிராமங்கள்
இதற்கிடையே ஆளுநர் தமிழிசை கூறுகையில், "புதுச்சேரியில் 6 கிராமங்களும், காரைக் காலில் 4 கிராமங்களும் என மொத்தம் 10 கிராமங்கள் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி யுள்ளேன்.
சுதந்திர தினத்துக்கு முன் பாக புதுச்சேரியில் உள்ள அனை வருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கை வைத்து முயற்சி எடுக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு துறை செயலர்கள், தங்கள் துறைகளில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மக்களிடம் தடுப்பூசி பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுய உதவி குழுக்களுக்கு விருது, பரிசு தர பேரிடர் மேலாண்மைத்துறை நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளேன். கல்வித்துறை தனது கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்-ஆசிரி யர் சங்கத்தினருக்கு தடுப்பூசிஎடுத்துகொள்ள குறுஞ் செய்தி களை அனுப்பலாம்" என்று தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT