Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கரோனா தொற்றால் : போடி சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு :

தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் அழகர்ராஜா (58). இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்பு இருந்தது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். இவரது உடல் போடி அரசு மின் மயானத் தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x