Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து லாரி மற்றும் ரயில்களில் ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் தலைமையில், மண்டல இடத்து துணை வட்டாட்சியர் சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் காஞ்சனா, வருவாய் ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் செட்டியப்பனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ் வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அதில் 5 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. ஓட்டுநரிடம் விசாரிக்க முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து, லாரியுடன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் அரிசியை நுகர்பொருள் வாணிப கழகத்திலும், லாரியை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அரிசி கடத்தலில் ஈடுபட்டது யார் ? என்றும், தப்பியோடிய ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT