Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப் பனூர் நீர்த்தேக்க அணையின் புனரமைப்புப் பணிகளை வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆண்டியப் பனூர் பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சுமார் 65 ஏக்கர் பரப்பில் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணை கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆண்டி யப்பனூர் அணையை புனரமைத்து அதை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆண்டியப்பனூர் அணை சுற்றுலாதலமாக்கப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஆண்டியப்பனூர் அணை புனரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன்பிறகு ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையின் ஒரு பகுதியில் குழந்தைகள் விளை யாட்டு திடல், பூங்கா, நடைபாதை, படகு இல்லம், விருந்தினர் மாளிகை உள்ளிட்ட புனரமைப்புப்பணிகள் தொடங்கப்பட்டன.
இப்பணிகள் விரைவாக நடைபெறாமல் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந் நிலையில், வாணியம்பாடி சட்டப் பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள், ஆண்டியப்பனூர் அணையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகள் குறித்து எம்எல்ஏவிடம் விளக்கம் அளித்தனர்.
அப்போது, அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாசன வசதிக்காக பயன்படுத்த வேண்டும். புனரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT