Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM
ஆந்திர மாநிலத்தில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் வரும் நேரத்தில், அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்களுக்காக ஆரோக் கிய பீமா திட்டமும், நஷ்ட ஈடும் வழங்க அரசு முன் வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இளநிலை மருத்துவர்கள் அரசுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இதனால், நாளை கரோனாவார்டு தவிர மற்ற பணிகளையும், 10-ம் தேதி கரோனா வார்டு பணிகளையும், 11-ம் தேதி கரோனா ஐசியு வார்டு பணிகளையும் புறக்கணிப்போம் என நோட்டீஸில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT