Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

பதவிகள் பிரிப்பதில் உள்ள மோதலை கைவிட்டு - ரூ. 3 ஆயிரம் கரோனா நிவாரணத்தை வழங்கவும் : புதுச்சேரி சட்டப்பேரவை திமுக தலைவர் வலியுறுத்தல்

புதுச்சேரி

புதுச்சேரியில் பதவிகள் பிரிப்பதில் உள்ள மோதலை ஆளும்கட்சியினர் கைவிட்டு, கரோனாவையொட்டி அறிவித்த ரூ. 3 ஆயிரம் நிவாரணத்தை மக்களுக்கு வழங்க திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை திமுக தலைவர் சிவா நேற்று வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் கரோனாவால்ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் மே மாதத்தில் உச்சமாக அதிகளவில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்குவதை புதுச்சேரி அரசு செயல்படுத்த வேண்டும்.

‘புதுச்சேரியில் கரோனா கால நிவாரணம் ரூ. 3 ஆயிரம்’ என அறிவித்து, இரு வாரங்களாகியும் அத்தொகை தரப்படவில்லை. இதற்கு மேலும் யாரையும் காரணம் கூறி, பழிபோட வேண்டாம்.

புதுச்சேரியில் அரசு அமைக்க முன்வந்துள்ள பாஜக, என்.ஆர்.காங்., மக்கள் நலனை முக்கியமாக கொண்டு, துறைகள், பதவிகள் பிரிப்பதில் தங்களிடையே உள்ளமோதல்களை கைவிட்டு, உடனடியாக முழு அமைச்சரவையை அமைத்து, அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும்

மளிகை நிவாரணம்

நிவாரண நிதியுடன் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் கோதுமை மாவு, ரவை, துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட 14 வகையிலான மளிகைப் பொருட்கள் வழங்குவதைப் போல் புதுச்சேரியிலும் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறந்து 14 வகையிலான மளிகைப் பொருட்களையும் வழங்க வேண்டும்.

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் உயிரிழந்த முன்களப்பணியாளர்களுக்கும் உரிய நிவாரணம் தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘புதுச்சேரியில் கரோனா கால நிவாரணம் ரூ. 3 ஆயிரம்’ என அறிவித்து, இரு வாரங்களாகியும் அத்தொகை தரப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x