Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM
ஆண்டிபட்டி அருகே டி.புதூரைச் சேர்ந்தவர்கள் பாக்கியராஜ்(37), ஜெயராமன்(36), ஜெயபாண்டி(35), டி.சுப்புலாபுரம் ஸ்டீபன்ராஜ்(36). இந்த 4 பேரும் டி.புதூர் மயானம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர்
இதுகுறித்து தகவலின்பேரில் ஆண்டிபட்டி சார்பு ஆய்வாளர் கே.கோதண்டராமன் அப்பகுதிக்குச் சென்றார். அப்போது பாக்கியராஜ், ஜெயபாண்டி ஆகியோர் தப்பி விட்டனர். ஜெயராமன், ஸ்டீபன்ராஜை கைது செய்து அவர்களிடம் இருந்து 30 லிட்டர் ஊறல் மற்றும் 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீஸார் கைப்பற்றினர்.
இதேபோல், வீரபாண்டி அருகே வயல்பட்டியில் 5 லிட்டர் கள்ளச் சாராயத்தை விற்பனைக்கு வைத்திருந்த ராஜவேல் (51), சுந்த ரேசன்(39), ராஜசேகரன்(33) ஆகி யோரை வீரபாண்டி சார்பு ஆய்வாளர் வரதராஜன் கைது செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT