Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

புதுச்சேரி மக்கள் கரோனா தொற்றில் இருந்து மீண்டுவர - முன்களப் பணியாளர்களின் உழைப்பு உறுதுணையாக இருக்கிறது : சுகாதாரத்துறை செயலர் அருண் பெருமிதம்

புதுச்சேரி மக்கள் கரோனா தொற் றில் இருந்து மீண்டு வருவதற்கு சுகாதாரத்துறை முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பு உறுதுணையாக இருக் கின்றன என்று சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் கரோனா தொற் றின் தாக்கம் நகர்புறங்கள் மட்டும் அல்லாமல் கிராமப் புறங்களிலும் அதிகம் பரவி, இப்போது குறைந்து வருகிறது. அதற்கு காரணம் சுகாதாரத்துறை முன்களப் பணியாளர்களான கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணி யாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வீடு வீடாகச் சென்று தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறிதல், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்தல், சிறப்பு முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்தல், தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்துவது, அவர்களோடு தொடர்புடையவர் களுக்கும் ஆரம்ப நிலையிலேயே கரோனா பரிசோதனை செய்வது, தேவைப்பட்டால் அவர்களையும் தனிமைப்படுத்துவது, மருத்துவர்களோடு சேர்ந்து துரிதமாக செயல்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி சோதனை மற்றும் வீட்டுத் தனிமைப்படுத்தல் குழுக்களோடு சென்று தொற்று ஏற்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை தினமும் பரிசோதித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி களை செய்து வருகின்றனர். 104 அழைப்பின் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு எந்த நேரத்திலும் மருத்துவ சேவை தேவைப்பட்டால் முன்களப் பணியாளர்கள் சென்று மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கரோனோ தொற்று அறி குறிகள், பாதுகாத்துக் கொள்ளும் முறைகள், கரோனா தடுப்பூசியின் நன்மைகள், கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தி தற்போது கரோனா தொற்று குறைய உதவி வருகின்றனர்.

அனைத்து மருத்துவ மனைகளிலும், ஆரம்ப சுகா தார நிலையங்களிலும், சிறப்புமுகாம்கள் அமைத்தும் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றது. தடுப்பூசியின் பலன்களை நன்கு எடுத்துக்கூறி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவுகின்றனர். தடுப்பூசிக்காக இணைய தளத்தில் பதியவும் இவர்களே உதவுகின்றனர். ஊரடங்கின்போது பொதுமக்களின் ஒத்துழைப்பும், முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பும் புதுச்சேரி மக்கள் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கும், உயிரிழப்புகளை மேலும் தடுப்பதற்கும் மிக உறுதுணையாக இருக்கின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x