Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
கர்நாடக மாநிலம் பெங்களூரு டாம்ளூர் ஏகே காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகள் வித்யா (29). இவர், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர் காந்தி வீதியில் நடத்திவரும் டாட்டூ கடையில் பணியாற்றி வந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி பணிக்கு சென்று வந்தார். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக விடுதி மூடப்பட்டது. இதைடுத்து சில வாரங்களாக வித்யா தான் பணியாற்றிய கடைக்குள்ளேயே தனியாக தங்கி, அங்கேயே சமைத்து உண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் தனது கடைக்கு சென்றபோது அங்கு வித்யா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடையில் இருந்த செல்போனை போலீஸார் கைப்பற்றிய நிலையில் அவை லாக் செய்யப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT