Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

‘கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கைது’ :

திருச்சி: திருச்சியில் நேற்று மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியது:

கருப்பு பூஞ்சைக்கான மருந்து மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் விற்கப்படுவதில்லை. திருச்சி மாவட்டத்துக்கு 50 எண்ணிக்கையிலான மருந்துகள் மட்டுமே வந்துள்ளன. அவை மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால், தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர்.

கருப்பு பூஞ்சை மருந்தை தனியார் மருத்துவமனைகளின் கோரிக்கைக்கேற்ப மத்திய அரசே நேரடியாக வழங்குகிறது. மாநிலத்திலேயே திருச்சி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x