Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM
தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி விற்றதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தடுப்பூசிகளை வாபஸ் பெறுவதாக பஞ்சாப் மாநில அரசு நேற்று மாலையே உத்தரவிட்டது.
அந்த உத்தரவில் பஞ்சாப் மாநில அரசு கூறியுள்ளதாவது: தனியார் மருத்துவமனைகளுக்கு பஞ்சாப் அரசு சார்பில் வழங்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை வாபஸ் பெறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்ற தனியார் மருத்துவமனைகள் தங்களது கைவசம் இருப்பு உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் மாநில அரசிடம் உடனடியாக திரும்ப அளிக்கவேண்டும்.
இதற்காக தனியார் மருத்துவமனைகள், அரசுக்குக் கொடுத்த தொகை திரும்ப வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT