Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM

நாட்டில் 1.32 லட்சம் பேருக்கு புதிதாக கரோனா தொற்று :

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தினசரி கரோனா பாதிப்பு குறையும் போக்கு இந்தியாவில் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,364 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. உயிரிழப்பும் 2,713 ஆக குறைந்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் மொத்த கரோனா நோயாளிகள் எண் ணிக்கை 2 கோடியே 85 லட்சத்து 74,350 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 40,702 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை யும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 77,420 பேர் குணம் அடைந்தனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 லட்சத்து 35,993 ஆக குறைந்துள்ளது. இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 5.73 சதவீதம். நாடு முழுவதிலும் இதுவரை 2.65 கோடிக்கும் மேற்பட்டோர் (93.08% பேர்) குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் கடந்த வியாழக்கிழமை 20 லட்சத்து 75,428 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பரிசோதனை 35 கோடியே, 74 லட்சத்து 33,846 ஆகஉயர்ந்துள்ளது. தினசரி பாசிட்டிவ் விகிதம் 6.38 சதவீதமாக இருந்தது. மேலும், தொடர்ந்து 11-வதுநாளாக பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கு குறைவாக பதிவாகியது. இவ்வாறு சுகாதாரத் துறை கூறியுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x