Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM
தமிழகத்தில் புதிதாக 22,651 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட463 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் 33,646 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 12,513, பெண்கள் 10,138 என மொத்தம் 22,651 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 2,810, சென்னையில் 1,971, ஈரோட்டில் 1,619, சேலத்தில் 1,187, திருப்பூரில் 1,161,தஞ்சாவூரில் 1,004 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்து 95,402 ஆக அதிகரித்துள்ளது.
19 லட்சம் பேர் குணமடைந்தனர்
கோவையில் 35,694, சென்னையில் 26,722 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 68,968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 463 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 71 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26,128 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 7,362 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 13,229, கோவையில் 1 லட்சத்து 82,708, செங்கல்பட்டில் 1 லட்சத்து 44,639, திருவள்ளூரில் 1 லட்சத்து 3,990 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.
தமிழகத்தில் 271 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 83 லட்சத்து 71,312 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 75,033 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT