Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM

219 மதுபான பாட்டில்கள் பறிமுதல் :

ஆரணியில் காய்கறி ஏற்றி வந்த லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 219 மதுபான பாட்டில்களை காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கூட்டுச்சாலையில் ஆரணி கிராமிய காவல்துறையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டபோது, கர்நாடக மாநிலத்தில் இருந்து 219 மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாதப்பன், சூளகிரியைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 219 மதுபான பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x