Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

24,240 கிலோ ரேஷன் அரிசி கடத்திய லாரி செஞ்சி அருகே பறிமுதல் :

செஞ்சி அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரி.

விழுப்புரம்: செஞ்சி அருகே ஞானோதையம் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வளத்தி காவல் உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீஸார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செஞ்சியிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 24,240 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒளிமத்திபேட்டையைச் சேர்ந்த முரளி(37), காஞ்சிபுரம் வேலூர் மெயின் ரோடைச் சேர்ந்த மணிகண்டன் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் லாரியை வளத்தி போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x