Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

:

திருட்டு வழக்குகளில்

தொடர்புடைய இருவர் கைது

திருப்பூர்

திருப்பூர்-அவிநாசி அருகேயுள்ள அவிநாசிலிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் ,ஆண்டியார்தோட்டம் செட்டிபாளையம் சாலை பகுதியில் நேற்று முன்தினம் சென்றபோது, 2 பேர் கத்தியை காட்டி மிரட்டிரூ.1,500-ஐ பறித்தனர்.

புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மீனாகன்னிபட்டியை சேர்ந்த ராமர் (24),மதுரை உசிலம்பட்டி அருகேயுள்ள பொம்மனம்பட்டியை சேர்ந்த கீர்த்தி (21) ஆகியோரை வீரபாண்டி போலீஸார் கைது செய்தனர்.விசாரணையில் திருப்பூரில் நிகழ்ந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் இருவருக்கும் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிபொருட்கள், இருசக்கர வாகனங்கள், மடிக்கணினிகள் பறிமுதல்செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x