Published : 03 Jun 2021 03:14 AM
Last Updated : 03 Jun 2021 03:14 AM

புயல் பாதுகாப்பு மையங்களை சீரமைக்க ஆட்சியர் அறிவுரை :

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியது: ஊரக வளர்ச்சித் துறையினர், நீர்வளத் துறையினர் தங்களது பகுதியில் உள்ள நீர்நிலைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை பொதுப்பணித் துறையினர் உடனே சீரமைக்க வேண்டும்.மழை அளவு, மழை பாதிப்புகள் போன்ற தகவல்களை தினந்தோறும் காலை 7 மணிக்குள் பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு வட்டாட்சியர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x