Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM
புதுடெல்லி: கரோனா தொற்றிலிருந்து ஏற்கெனவே குணமடைந்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் 21-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தனிமைப்படுத்திக்கொண்ட அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக் கொண்டார். பின்னர் கரோனாவிலிருந்து குணமடைந்த அவர், வழக்கமான பணிகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில், அமைச்சர் பொக்ரியாலுக்கு நேற்று காலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை மருந்தியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிஸ்சல் கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், என்ன பிரச்சினை என்ற தகவல் வெளியாகவில்லை.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT