Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

கோவை மாநகராட்சி பகுதியில் - கோழி இறைச்சி, முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி : மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக தற்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கோவை மாநகராட்சிப் பகுதியில் அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நேரக் கட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியைக் கடைபிடித்து வியாபாரம்செய்து கொள்ள அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசாணை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அரசு முதன்மை செயலாளரின் கடிதத்தின்படி மாநகராட்சிப் பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும், அவ்வாறு விற்பனை செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x