Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

கோடமூலா கிராமத்துக்குள் - வெளிநபர்கள் வருவதை தடுக்க மூங்கில் தடுப்பு அமைப்பு :

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதியில் கரோனா தொற்றுவேகமாக பரவி வருகிறது.

இதனால், கோடமூலா கிராமத் துக்குள் வெளி ஆட்கள் யாரும் வரமுடியாத வகையில், ஊருக்குள்நுழைய பயன்படுத்தப்படும் நான்குபக்க சாலைகளிலும் மூங்கிலை வெட்டிச்சாய்த்து பழங்குடியின மக்கள் தடுப்புகளை அமைத்து வருகின்றனர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை ஏற்றிவரும் வாகனங்களை யும் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘எங்கள் கிராமத்தில் இதுவரை யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. வெளியில் இருந்து வரும் நபர்களால்தான், எங்கள் கிராமத்தில் தொற்று ஏற்படும் ஆபத்து இருக்கிறது. எனவே, ஊருக்குள் வெளிநபர்கள் வருவதைத்தடுக்கவே மூங்கில் தடுப்புகளை அமைத்துள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x