Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

புதுவை வணிகர்களுக்கு நாளை கரோனா தடுப்பூசி முகாம் :

புதுச்சேரி: புதுச்சேரி நேரு வீதி வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் அனைத்து வணிகர்களுக்காக சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நாளை (ஜூன் 3) நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் தகவல் விவரம்:

45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் இணையவழி மூலம் முன்பதிவு செய்து, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

45 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தும் முயற்சியாக நேரு வீதி வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் அனைத்து வணிகர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகத்தில் நாளை சிறப்பு தடுப்பூசி மையத்தை சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறும். வணிகர்கள் அனைவரும் முகாமிற்கு வந்து, தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x