Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் - கரோனா ஆலோசனை மையம் :

மதுரை

மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், கரோனா உதவி மற்றும் ஆலோசனை மையத்தை சு.வெங்கடேசன் எம்பி நேற்று தொடங்கிவைத்தார்.

இம்மையம் மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர், ஆக்சிஜனுடன் படுக்கை வசதி ஏற்படுத்துதல், ஆம்புலன்ஸ் உதவி, அமரர் ஊர்தி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

நோய் பாதித்து வீட்டில், மருத்துவமனைகளில் தனிமை யில் உள்ளவர்களுக்கு மனவலி மையை ஏற்படுத்துவதற்கு ஆலோசனை வழங்குதல், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்க இயலாதவர்களுக்கு உதவிடும் வகையில் உதவி மற்றும் ஆலோசனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்மையத்தை 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். 140 பேர் வரை தன்னார்வலர்கள் பணியாற்று கின்றனர். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இதில் சு.வெங்கடேசன் எம்பி, மார்க்சிஸ்ட் மாநகர் மாவட்ட செயலாளர் ரா.விஜயராஜன், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் மா.கணேசன் ஆலோசகராக உள் ளனர். ஆலோசனை மையம் “27 எஃப், சர்வோதயா சாலை, மதுரை-625016” என்ற முகவரியில் இயங்குகிறது. 9486356464, 9442960300, 9894034527, 9080357101, 8122134909 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x