Published : 31 May 2021 03:11 AM
Last Updated : 31 May 2021 03:11 AM

13 மாவட்டங்களில் வெப்பநிலை அடுத்த 2 நாட்களுக்கு உயரும் :

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

கேரளப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3-ல் தொடங்கும் என தெரிகிறது.

வெப்பச் சலனம் காரணமாக மே 31, ஜூன் 1-ம் தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x