Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM

சென்னை, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் - 5 டிகிரி வரை வெப்பம் உயரும் :

சென்னை

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது வடமேற்கு திசையில் இருந்து தரைக் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும்.

வெப்பச்சலனம் காரணமாக ஜூன் 1-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

சூறைக் காற்றுடன் மழை

ஜூன் 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x