Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

ஒடிசாவில் கடலில் படகு கவிழ்ந்த போது - இரவில் ஒரு டார்ச் உதவியுடன் 10 பேரை காப்பாற்றிய மீட்பு படையினர் :

யாஸ் புயல் கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிசா மாநிலத்தைக் கரை கடந்தது. அப்போது இரவு நேரத்தில் ஜகத்சிங்பூர் மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு ஒன்றுகவிழ்ந்துள்ளது. இதில் மீனவர்கள் பலர் உயிருக்குப் போராடினர்.

ஜகத்சிங்பூர் மாவட்ட பாதுகாப்புப் பொறுப்பாளராக ஐஜி அமிதாப் தாக்குர் நியமிக்கப் பட்டிருந்தார். படகு கவிழ்ந்த தகவலை மீனவர் ஒருவர் எரசமா வட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) கைலாஷ் பெஹ்ராவிடம் கூறியுள்ளார். அவர், தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) ஐ.ஜி. அமிதாப் தாக்குருக்கு கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐ.ஜி. அமிதாப் தாக்குர் கூறும்போது, ‘‘இரவு நேரத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவது மிகவும் சிரமமானது. எனினும், என்டிஆர்எப் படையினர்,பிடிஓ.வின் டார்ச் லைட்டை வாங்கிக் கொண்டு மிதவைப் படகில் கடலில் இறங்கினர். இரவில்டார்ச் லைட் வெளிச்சத்தில் தேடி 10 மீனவர்களையும் உயிருடன் மீட்டனர். புயல் காரணமாக யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வழங்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி அவர்கள் சென்றுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

மீனவர்களை காப்பாற்றிய வீரர்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x