Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

மதுபாட்டில்கள் கடத்திய போலீஸ் உட்பட 2 பேர் கைது :

தமிழகத்தில் முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், காலை 6 மணி முதல் 10 மணி வரை மதுபான கடைகள் செயல்பட அம்மாநில அரசு தளர்வு அளித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் இருந்து பெங்களூரு, அத்திப்பள்ளி, ஆணைக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வந்து இங்கு கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சின்னாறு சோதனைச்சாவடியில் நேற்று பஞ்சப்பள்ளி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தொட்டபடகானப்பள்ளியைச் சேர்ந்த தயானந்தன் (28), இளவரசன் ஆகியோர், கர்நாடகாவில் இருந்து 157 மதுபாட்டில்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. தயானந்தன், தளி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருவது தெரிந்தது. போலீஸார் 2 பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x