Published : 28 May 2021 06:42 AM
Last Updated : 28 May 2021 06:42 AM
ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கரோனா பேரிடர் உதவி மையம் திறக்கப்பட்டது. இதன் மாவட்டத் தலைவர் முகமது ஷஃபீக் தலைமை வகித்தார். பேரிடர் உதவி மையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை இலவசமாக வழங்குவது, ஆம்புலன்ஸ், ரத்த தான சேவைகள், கபசுரக் குடிநீர், உணவு அளிப்பது உட்பட பல்வேறு பணிகள் இம்மையத்தின் மூலம் மேற்கொள்வதாக கிளை தலைவர் ஜான் பாட்ஷா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ரங்கநாதன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சத்தார், மாவட்ட துணைச் செயலாளர் ராசிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT