Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

12-ம் வகுப்பு : தேர்வுக்கு முன் தடுப்பூசி: அகிலேஷ் :

கரோனா 2-வது அலை பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு சமீபத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியது. இதில் தேர்வை நடத்த வேண்டும் என்றும் முன்னதாக மாணவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘கரோனா தொற்று ஏற்படாமல் மாணவர்களை பாதுகாக்க வேண்டும். 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வுக்கு முன் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும். பிறகுதான் தேர்வுநடத்த வேண்டும். தடுப்பூசி இல்லாவிட்டால், தேர்வும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x