Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

தேசிய திறனாய்வுத் தேர்வில் - வேலம்மாள் போதி வளாக மாணவர்கள் சாதனை :

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நடத்தப்படுகிறது.

நன்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதே இந்தத் தேர்வின் நோக்கமாகும். வேலம்மாள் கல்வி நிறுவனம் தனது திறமையான சிறந்த ஆன்லைன் பயிற்சியின் மூலம் தேசிய திறனாய்வுத் தேர்வில் இந்த ஆண்டும் வெற்றிச் சாதனையை நிரூபித்துள்ளனது.

இந்த ஆண்டு வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் பயின்ற 281 மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கு பெற்று அவர்களில் 77 மாணவர்கள் முதல்நிலை தேர்வில் மாபெரும் வெற்றி பெற்று இரண்டாம் நிலைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது ஆன்லைன் பயிற்சி மற்றும் நேரடி பயிற்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் தரத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் புதிதாக ‘விபிலைவ் ஆன்லைன்’ மூலம் ‘இடிடெக்’ கல்வித் தொழில்நுட்ப இணையதளத்தை வேலம்மாள் தொடங்கியுள்ளது. இந்தத் தரமானத் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் பயிலாத பிற மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி உள்ளது. l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x