Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

இந்தியாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு - தினசரி கரோனா பாதிப்பு 2.22 லட்சமாக குறைந்தது : குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண் ணிக்கை கணிசமாக குறைந்து வரு கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 2.22 லட்சமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை மிகவேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.22 லட்சத்துக்கு குறை வாக இருந்தது. அதன்பிறகு தினசரி பாதிப்பு மளமளவென அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்க ப்பட்டனர். இதையடுத்து, தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டன. கரோனா பரவலைத் தடுக்க பல மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அதன் பலனாக கரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 3 லட்சத்துக்குகீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 22,315 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினசரி கரோனா பாதிப்பு, ஒரு மாதத்துக்குப் பிறகு 2.22 லட்சமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகா ராஷ்டிராவில் 26,672 பேர், கர்நாடகாவில் 25,979, கேரளாவில் 25,820, ஆந்திரா வில் 18,767, மேற்குவங்கத்தில் 18,422, ஒடிசாவில் 12,852 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவில் வைரஸ் பரவல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. அங்கு 2,242 பேரிடம் மட்டுமே தொற்று கண்டறியப் பட்டுள்ளது.

நாட்டில் நேற்று மட்டும் 4,454 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இதுவரை 3 லட்சத்து 3,720 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 88,620 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக கர்நாடகா (25,282), டெல்லி (23,202), தமிழ்நாடு (20,468), உத்தர பிரதேசம் (19,209) ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

நாடுமுழுவதும் தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 20,716 ஆக குறைந்துள்ளது. அதேபோல் குண மடைவோரின் எண்ணிக்கையும் 88.69 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2.67 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 2,544 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 2.37 கோடி பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது மருத்துவமனை, வீடுகளில் 27 லட்சத்து 20,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நாடு முழுவதும் இதுவரை 19.6 கோடி டோஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 6 லட்சம் பேரும், பிரேசி லில் 4.49 லட்சம் பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நாடுகளுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x