Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM
டெல்லியில் தொழிலதிபர் நவ்நீத் கல்ராவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஓட்டல்களில் இம்மாத தொடக்கத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் 500-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் கைப்பற்றப்பட்டன.
கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக இவற்றை பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது நவ்நீத்கல்ரா 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அமலாக்கத் துறையினரும் வழக்கு பதிவு செய்து, டெல்லியில் நவ்நீத் கல்ரா மற்றும் அவரது சகாக்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT