Published : 21 May 2021 03:11 AM
Last Updated : 21 May 2021 03:11 AM

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பொருட்கள் திருட்டு :

கோவை வீரபாண்டி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி சாவித்திரி(52). இவர், கடந்த 16-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் செல்வபுரத்தில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

நேற்று முன்தினம்காலை வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டி ருந்தது. வீட்டில் பீரோ உடைக்கப் பட்டு, அதிலிருந்த தாலிக்கொடி, சங்கிலி, காதணி என 15 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x