Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

கர்நாடகாவில் விவசாயிகள், தொழிலாளருக்கு ரூ.1,250 கோடி நிதி அறிவித்தார் எடியூரப்பா :

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் அவர் கூறியதாவது:

இந்த ஆண்டு ஊரடங்கினால் வருமானத்தை இழந்தவர்களுக்கு ரூ.1,250 கோடி மதிப்பில் நிதியுதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதன்படி காய், பழம், பூ, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஆட்டோ, கால் டாக்ஸி, வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும், திரைப்படத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.கட்டிட தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல் கலைஞர்கள், சாலையோர வியாபாரிகள், பொற்கொல்லர் உள்ளிட்டோருக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். வாகன பழுது பார்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், குப்பை சேகரிப்போர் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும். பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட‌ பகுதிகளில் உள்ள இந்திரா உணவகத்தில் மூன்று வேளையும் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் எடியூரப்பா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x