Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM
முதல்வர் ரங்கசாமி கரோனாவால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில், "தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தவர். இந்திய நாட்டின் தெற்கு கடைக்கோடியில் இடைச்செவல் கிராமத்தில் இருந்து வந்து தனது எழுத்து ஆளுமையாலும், கதை சொல்லும் தனித்த பாங்கினாலும் இந்தியாவில் புகழ்மிகு எழுத்து ஆளுமையாக உயர்ந்தவர். கரிசல் இலக்கியத் தந்தை என போற்றப்படும் அவர், புதுச்சேரி மீதும், புதுச்சேரி இலக்கிய ஆர்வலர்கள் மீதும் மாறாத பற்றும் அன்பும் கொண்டவர். இலக்கிய பாதையில் புதிய வெளிச்சத்தைக் காட்டிய விடிவெள்ளியை இந்திய இலக்கிய வானம் இழந்து விட்டது. அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு மட்டுமல்ல, இந்திய இலக்கிய உலகிலும் ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT