Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

சாலை வரி செலுத்த ஜூன் வரை அவகாசம் :

அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களுக்கான சாலை வரியை செலுத்த ஜூன் மாதம் வரையில் அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பால் வருமானம் இன்றி முடங்கியுள்ளதால், சாலை வரி செலுத்த அவகாசம் அளிக்க வேண்டுமென வாகனஉரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, சாலை வரி செலுத்த அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கரோனா பாதிப்பால் நிதி நெருக்கடியில் இருப்பதால், முதல் காலாண்டு வரி செலுத்த அவகாசம் அளிக்குமாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உட்பட பலர் அரசிடம் வலியுறுத்தினர்.

இக்கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், அனைத்து வகைபோக்குவரத்து வாகனங்களுக்கும் சாலை வரியை ஜூன் மாதம் வரை காலக்கெடு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து வகை போக்குவரத்து வாகன உரிமையாளர்களும் அபராதம் இன்றி சாலை வரியை செலுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x