Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM
ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில், எழுத்தர் பதவியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், அதற்கு மே 17 (இன்று) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளை ஏற்று,இதற்கான அவகாசம் மே 20-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. www.sbi.co.in/careers இணையதளம் மூலம் மே 20 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எழுத்தர் பணிக்கான தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது பட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 28, ஓபிசி பிரிவினருக்கு 31, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 33, மாற்றுத் திறனாளிகளுக்கு 38 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஜூலை 31-ம் தேதி இணையவழியில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT