Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆதார் கார்டு கட்டாயம் இல்லை : இந்திய பிரத்யேக அடையாள ஆணையம் அறிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற் கும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் கிடையாது என இந்திய பிரத்யேக அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை கள் நிரம்பி வழிகின்றன. இதனால் படுக்கைகள் கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில், ஆதார் அட்டை இல்லாமல் வரும் கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்கமறுக்கிறார்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் எழுந்துள் ளன. அதேபோல, ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படு வதில்லை என்ற செய்திகளும் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆதார் திட்டத்தின் அதிகாரப்பூர்வ அமைப்பான யுஐடிஏஐ நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆதார் அட்டை இல்லாததை காரணம் காட்டி, இந்தியக் குடிமக்கள் யாருக்கும் அத்தியா வசிய சேவைகளும், நலத்திட்டப் பலன்களும் மறுக்கப்படக் கூடாது. இதுதொடர்பான நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆதார் சட்டத்திலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசி செலுத்து வதற்கும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கும் ஆதார் அடையாள அட்டை எண்ணை கட்டாயமாக்கக் கூடாது. ஒருவர் ஆதார் எண் இல்லாமல் வரும்பட்சத்தில், ஆதார் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி அவருக்கு அடிப்படை சேவை கிடைக்க செய்வதை சம்பந்தப்பட்ட துறைகள் உறுதி செய்ய வேண்டும்.

இதுபோன்ற சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் என எங்கேனும் கூறப்படுமேயானால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு யுஐடிஏஐ அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x