Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப் பதற்கு சில பரிந்துரைகளை பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, “பிரதமர்மோடிக்கு குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக நடவடிக்கைகளை அவர் இக்கடிதத்தில் பரிந்துரைத் துள்ளார்.
கரோனா தொற்று நோயை கருத்தில் கொண்டு, சுகாதார உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் ஆசாத் வழங்கியுள்ளார். கரோனா நோயை எதிர்கொள்வதற்கு தடுப்பூசி உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கவும் சில பரிந்துரைகளை ஆசாத் செய்துள்ளார். இந்தக் கடிதத்தின் நகலை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கும் அவர் அனுப்பியுள்ளார்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT