Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

வேலூர் ஆட்சியர், அணைக்கட்டு எம்எல்ஏவுக்கு கரோனா :

வேலூர் மாவட்டத்தில் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 643 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு, காய்ச்சல் அறிகுறிஏற்பட்டதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு கரோனா உறுதியானதையடுத்து, அவர் வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல், அணைக்கட்டு தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ நந்தகுமார் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x