Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM
அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், சென்னையில் இன்றுமுதல் மின்சார ரயில்கள் குறைத்து இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனால், கூட்டம் இல்லாததால், மின்சார ரயில்களின் சேவை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களாக 280 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இது மேலும் குறைக்கப்பட்டு 208 மின்சார ரயில்கள் மட்டும் இன்றுமுதல் இயக்கப்பட உள்ளன’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT