Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM
கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 1.20 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து தமிழகத்துக்கு நேற்று அனுப்பியது. சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்றனர்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் 12 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT