Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

மடையத்தூர் கிராமத்தில் - இளைஞர்கள் குழு சார்பில் தூய்மைப் பணி :

திருப்போரூரை அடுத்த மடையத்தூர் கிராமத்தில் ‘டிராகன் பாய்ஸ்’என்ற இளைஞர்கள் குழு சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் மடையத்தூர் கிராமப் பகுதியில் உள்ள சாலைமற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் ஏராளமான உபயோகிக்கப்பட்ட முகக்கவசங்கள் பொதுமக்களால் வீசப்பட்டு இருந்தன். இவற்றை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளை அப்பகுதியைச் சேர்ந்த ‘டிராகன் பாய்ஸ்’ என்ற இளைஞர் குழுவினர் மற்றும் ஊராட்சி செயல் அலுவலர் பரிமளா கோவிந்தசாமி ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். அனைத்து குடியிருப்பு தெருக்கள் மற்றும் கிராமத்தின் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளபட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x