Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில், ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சிகடை செயல்படுவதாக நேற்றுமுன்தினம் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உள்ளிட்டோர் அங்குசென்று ஆய்வு மேற்கொண்டதில், ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சிக் கடை செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைக்கு `சீல்' வைத்த அதிகாரிகள், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், கடையில் இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து, அழித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT