Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

பராமரிப்புப் பணிக்காக டிஎன்பிஎல் இன்று முதல் மே 24-ம் தேதி வரை மூடல் :

கரூர்

பராமரிப்புப் பணிக்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) இன்று(மே 17) முதல் மே 24-ம் தேதி வரை மூடப்படுகிறது.

கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஊழியர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, ஆலையை 15 நாட்கள் மூடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்களின் 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஆலையை மூட நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அதன்படி, இன்று (மே 17) முதல் மே 24-ம் தேதி வரை 8 நாட்களுக்கு பராமரிப்புப் பணிக்காக ஆலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். ஆலை மூடப்படும் நாட்களில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் கள் 155 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீஸார் தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x