Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM
குடியாத்தம்: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் மொத்தம் 130 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், 100 சாதாரண படுக்கையும், 30 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு வார்டில் 20 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதியும், 50 சாதாரண படுக்கை வசதியும் ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், ஒருங்கிணைந்த ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பு இல்லாத நிலையில் சிலிண்டர்கள் மூலம் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 20 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியாவதாக கூறப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பை ஏற்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிய இரண்டு வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ஆக்சிஜன் விநியோக வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வழங்கினர். அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் மாறன்பாபுவிடம் இந்த ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை ரோட்டரி சங்கத் தலைவர் ஹரிகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜவுரிலால் ஜெயின், மாவட்ட ஆளுநர் (நியமனம்) ஜெ.கே.என்.பழனி ஆகியோர் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT