Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM
கரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி.,எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கரோனா தடுப்புபணிகளுக்கு உதவ முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு தொழிலதிபர்கள், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, தொழில் துறையினர், வணிகர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சிகள், பொதுமக்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என்று பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா 2-வது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதியாக வழங்குவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT