Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM
தெலங்கானா மாநிலம், நெல்லகுதூரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடந்த 11 நாட்கள் இடைவெளியில் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.
இதேபோல் விஜயவாடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கடந்த 10 நாட்களில் ஒருவர் பின் ஒருவராக கரோனாவால் உயிரிழந்துள்ளனர். சிலருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் வெளிப்படாமல், குடும்பத்துடன் இருந்ததாலும், மேலும், சிலருக்கு கரோனா பரிசோதனை முடிவு வெளியாவ தில் தாமதமானதாலும் மரணத்துக்கு காரணமானதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT