Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

கரோனாவில் இறப்போர் உடல்களை எரிப்பதற்காக - தத்தனேரியில் கூடுதலாக 3 மின் தகன மேடைகள் : ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி தீவிரம்

மதுரையில் கரோனாவால் இறப் போர் உடல்களை உடனுக்குடன் எரிக்க முடியாமல் மயானங்களில் உறவினர்கள் காத்திருக்கும் அவ லம் ஏற்பட்டுள்ளது. அதனால், தத்தனேரி மயானத்தில் கூடுதலாக 3 எரியூட்டும் மேடைகள் ஒரு வாரத்தில் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவின் இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அடுத்து தென் மாவட்டங்களில் மதுரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே மதுரையில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் 15 முதல் 17 பேர் இறப்பதாக அரசுத் தரப்பில் கூறி னாலும் 80-க்கும் மேற்பட்டோர் இறப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், மதுரையில் உள்ள மாநகராட்சி மின் மயானங்களில் கரோனாவில் இறப்போரை உட னுக்குடன் எரிக்க முடியாமல் உடல்கள் குவிகின்றன. உறவி னர்கள் இறந்தவர்களின் உடல் களை மின் மயானங்களில் எரிக்க வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனையிலிருந்து பெறுவதற்கு 5 மணி நேரம் முதல் ஒருநாள்கூட ஆகிவிடுகிறது. அதுபோல் உடல்களை எரிக்கவும் ஒரு நாள் ஆகிவிடுவதால் கரோனாவில் இறந்தவர்களின் உறவினர்கள் ஏற்கெனவே இருக்கும் சோகத்தைத் தாண்டி இறந்தவர்களுக்கு இறுதி மரியா தையைக்கூட செய்ய முடியாமல் மயானங்களில் காத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் தத் தனேரி, மூலக்கரை (கீரைத்துறை) ஆகிய இரு இடங்களில் மின் மயானங்கள் உள்ளன.

இவற்றில் தலா 2 மின் தகன மேடைகள் உள்ளன. இந்த மயானங்கள் கரோனாவில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய 24 மணி நேரமும் செயல்படுகின்றன. ஒரு உடலை எரிப்பதற்கு 40 நிமிடங்கள் ஆகும். ஒரு மின் தகன மேடையில் 25 உடல்களை எரிக்கலாம். அந்த வகையில் இரு மயானங்களிலும் 100 உடல்களை எரிக்கலாம். ஆனால், கரோனாவில் இறப் போரே நாளொன்றுக்கு 80-க்கும் மேற்பட்டோர் என்பதோடு வீடுகளில் இறப்போர், தனியார் மருத்துவமனைகளில் இறப்போர், மற்ற காரணங்களில் இறப்போர் உடல்களை மயானங்களில் எரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அதனால், எதிர்கால, தற் போதைய கரோனா நிலைமையைக் கருத்தில்கொண்டு தத்தனேரி மயானத்தில் மேலும் 3 மின் தகன மேடைகள் அமைக்கப்பட உள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறுகையில், ‘‘இந்த மூன்று தகன மேடைகளும் ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு வந்து விடும். அவை அமைந்த பிறகு தத்தனேரி மயானத்தில் மட்டுமே 125 உடல்களை எரிக்கலாம். உறவினர்கள் உடல்களை எரிக்க மயானங்களில் காத்திருக்கும் நேரம் குறையும்.

மேலும், கரோனாவில் இறப் போரை மட்டுமே தத்தனேரியில் எரிக்க முடிவு செய்யப்படும். மற்ற காரணங்களால் இறப் போர் உடல்கள் மூலக்கரை மயானத்துக்கு அனுப்பி வைக் கப்படும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x