Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

முறைகேடு தொடர்பான புகார்கள் - மாநகராட்சி முன்னாள் அதிகாரி மீது நடவடிக்கை :

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வர் வழக்கறிஞர் முத்துக்குமார். இவர் அரசு தலைமை செயலாளர் மற்றும் லஞ்ச, ஊழல் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு ஏப்ரல் 23-ம் தேதி புகார் மனு ஒன்று அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சியில் நகர் பொறி யாளராகப் பணிபுரிந்த மதுரம், தற்போது ஈரோடு மாநகராட்சியில் பணிபுரிகிறார். அவர் மதுரை மாநகராட்சியில் உதவி நிர்வாகப் பொறியாளராக இருந்தபோது, ‘ரோபோ’ வாகனம் வாங்கியதில் முறைகேடு, மாநகராட்சி ஊர்தி களுக்கு வாகனப் பதிவை தாமதித்து ரூ.6 லட்சம் இழப்பு ஏற்படுத்தியது உட்பட பல்வேறு முறைகேடு குறித்து விசாரணை நிலுவையில் உள்ளது.

5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அவர் மீதான இக்குற்றச் சாட்டுகளை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அதிகாரமில்லாத பணி யில் அவரை அமர்த்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட் டுள்ளார்.

இப்புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச, ஊழல் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு நகரமைப்பு நிர்வாக ஆணையாளர் அண்மை யில் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகல் ஒன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரால் வழக்கறிஞர் முத்துக்குமாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x